உலகம் செய்தி

முஸ்லிம்கள் என்பதற்காக இருவரை குத்திக் கொலைசெய்த முதியவர்

71 வயதான ஜோசப் சுபா, முஸ்லிம்கள் என்பதற்காக இருவரைக் கத்தியால் குத்திக் கொலைசெய்துள்ளார், அவர் மீது கொலை மற்றும் வெறுப்புக் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் இலினொய்ஸ் மாகாணத்தில் உள்ள ப்ளைன்ஃபீல்டில் வசித்து வந்த ஆறு வயது சிறுவனைக் கொன்றது மற்றும் 32 வயதுடைய பெண்ணைக் காயப்படுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள் முஸ்லிம்கள் என தெரியவந்துள்ளதாகவும், ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்று வரும் மோதல்கள் காரணமாகவே இவர்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர் எனவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பாலஸ்தீன-அமெரிக்கர்கள் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதன்படி, ஜோசப் சுபா மீது முதல் நிலை கொலை, முதல் நிலை கொலை முயற்சி மற்றும் வெறுப்பு குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து அதிகாரிகள் கூறுகையில், காயமடைந்த பெண் கடந்த சனிக்கிழமை பாதுகாப்புப் படையினருக்குத் தான் தாக்கப்படுவதாகக் கூறி அழைப்பு விடுத்தார்.

பின்னர் அந்த இடத்திற்கு வந்த பாதுகாப்புப் படையினர், குறித்த பெண்ணும் சிறுவனும் எவ்வாறு கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர் என்பதை பார்த்தனர்.

பின்னர், காயமடைந்த இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், குழந்தை இறந்தது. பின்னர் குழந்தை 26 முறை கத்தியால் குத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

(Visited 3 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content