இலங்கை செய்தி

200 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிக்கு பொதுமன்னிப்பு

200 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் உள்ளிட்ட இரண்டு தமிழ் அரசியல் கைதிகள் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக குரலற்றவர்கள் குரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

சண்முகரத்தினம் சண்முகராஜன் மற்றும் செல்லையா நவரத்தினம் ஆகிய இரு கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டதாக அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோமகன் தெரிவித்துள்ளார்.

இங்கு 1996 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி இலங்கை மத்திய வங்கி மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலுக்காக செல்லையா நவரத்தினம் என்ற நபருக்கு 200 வருடங்கள் சிறைத்தண்டனையும், மற்றைய சண்முகரத்தினம் சண்முகராஜன் என்பவர் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனையும் விதிக்கப்படிருந்தனர்.

இந்நிலையில், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட இருவரும் இன்று மாலை சிறையிலிருந்து வெளியே வந்ததாக குரலற்றவர்களின் குரல் அமைப்பு கூறுகிறது.

(Visited 7 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content