Site icon Tamil News

தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் அனைத்து உறுப்பினர்களும் நீக்கம்!

தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் தலைவர் உட்பட அனைத்து நிர்வாக சபை உறுப்பினர்களையும் பிரதமர் தினேஷ் குணவர்தன நீக்கியுள்ளார்.

அந்த நிறுவனத்திற்கு புதிய நிர்வாக சபையொன்றை நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பாடத்துறை அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version