Site icon Tamil News

இலங்கையில் தபால் ஊழியர்களின் விடுமுறையை இரத்து செய்ய நடவடிக்கை!

நாளை முதல் வரும் 10 ஆம் திகதிவரை  மூன்று நாட்களுக்கு அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையையும் இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தபால் மா அதிபர் ருவன் சத்குமார இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

தபால் தொழிற்சங்க ஊழியர்கள் இன்று (07.11) நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையிலேயே மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version