யாழ் வல்வெட்டித்துறையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சிவரூபன் தேனுஜா என்ற 24 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவர் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியாகாத நிலையில், சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனத் தெரியவருகிறது.