Site icon Tamil News

16 வயது சிறுமியின் அரைநிர்வாணப் புகைப்படங்களுடன் பெண் ஒருவர் கைது!

16 வயதுக்குட்பட்ட சிறுமியின் அரை நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமியின் தாயார் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய அவர் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள பெண் ஒருவர் உலகளாவிய ரீதியில் இயங்கும் அரச சார்பற்ற தன்னார்வ தொண்டு நிறுவனமொன்றின் அங்கத்தவர் என்பதுடன் மனித உரிமைகள் அமைப்பு ஒன்றின் தேசிய ஊடகப் பணிப்பாளரும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சிறுமியின் அரை நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக கூறி சிறுமியின் குடும்பத்தினரை அச்சுறுத்திய அவர் பின்னர் அவற்றை சமூக வலைத்தளங்களில் வௌியிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

குறித்த சிறுமி தற்போது கல்விப் பொதுத் தராதரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள நிலைியல், இந்தச் சம்பவத்தின் மூலம் சிறுமி கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அரைநிர்வாண புகைப்படங்கள் 4 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டவை என்றும்  அன்று தொடக்கம் அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டி சிறுமியை தொடர்ந்து துன்புறுத்தியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Exit mobile version