Site icon Tamil News

தென்னாப்பிரிக்காவில் நீர் நாய் ஒன்று மன உளைச்சலால் எடுத்த விபரீத முடிவு

தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் பெண்ணைக் கடித்த நீர் நாய் ஒன்று மன உளைச்சலால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக அது பிரபல ஸ்ட்ராண்ட் (Strand) கடற்கரையில் ஓய்வெடுக்க முயற்சி செய்த நிலையில் அது நீர் நாய்கள் வழக்கமாக நடந்துகொள்ளும் விதம் என்று நகரின் துணை மேயர் குறிப்பிட்டார்.

ஆனால் பொதுமக்கள் அதைத் துன்புறுத்தியதுடன், கற்களை அதன் மீது வீசுவதுடன், நாய்களைவிட்டுத் தாக்குவது, கேலி செய்வது போன்றவற்றை பார்த்து நீர் நாய் மனம் நொந்துள்ளது.

அது இருப்பது தெரியாமல் அதை நோக்கி நடந்துசென்ற பெண்ணை அது தாக்கியது. அந்தப் பெண் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

நீர் நாயும் சுகாதாரப் பரிசோதனைக்காக உள்ளூர் மீன் காட்சியகத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அது உயிரிழந்துள்ளது. இந்த நிலையில் கடற்கரைக்குச் செல்வோர் விலங்குகளைத் தொந்தரவு செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

Exit mobile version