Site icon Tamil News

அரபிக்கடலில் உருவாகியுள்ள தேஜ் புயல் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

தென்மேற்கு அரபிக்கடலில் தீவிரமான ‘தேஜ்’ புயல் தீவிரமடைந்து தற்போது ஏமனின் சோகோத்ராவில் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயலானது ஏமன் மற்றும் ஓமன் கடற்கரைகளுக்கு இடையே தேஜ் புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக முன்னுரைக்கப்பட்டுள்ளது.

புயல் தாக்கம் காரணமாக எதிர்வரும் 26 ஆம் திகதிவரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version