ஆசியா

சிங்கப்பூரில் இருந்து சென்ற படகில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து

சிங்கப்பூரில் இருந்து பாத்தாமுக்கு சென்று கொண்டிருந்த படகில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் பதிவெண்ணை கொண்ட குயின் ஸ்டார் 2 (QUEEN STAR 2) என்ற படகு 62 பயணிகள் மற்றும் படகு நிறுவனத்தின் 6 ஊழியர்கள் என மொத்தம் 68 பேருடன் சிங்கப்பூரில் இருந்து இந்தோனேசியா நாட்டின் பாத்தாமுக்கு சென்றுக் கொண்டிருந்தது.

இந்த நிலையில், கூசுத் தீவுக்கு (Kusu Island) அருகே படகு சென்றுக் கொண்டிருந்த போது மதியம் 12.30 மணியளவில், படகின் இயந்திர அறையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்து குறித்து சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் (Maritime and Port Authority of Singapore) மற்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (Singapore Civil Defence Force- ‘SCDF’), கடலோரக் காவல்படை (Police Coast Guard- ‘PCG’) உள்ளிட்டவை துறைகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் விரைந்து வந்தனர்.

எனினும், அவர்கள் வருவதற்கு முன்பாக படகு நிறுவனத்தின் ஊழியர்கள் தீயை முழுவதுமாக அனைத்து, பெரும் சேதத்தைத் தவிர்த்துள்ளனர்.

பின்னர், படகு மீண்டும் பயணத்தைத் தொடர்ந்ததை அடுத்து, பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக பாத்தாம் (Batam) தீவுக்கு சென்றடைந்தனர். தீ விபத்தில் யாருக்கும், எவ்வித காயமும் ஏற்படவில்லை என்று படகு நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

(Visited 5 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content