Site icon Tamil News

அமெரிக்காவில் பாடசாலை ஒன்றில் துப்பாக்கிச் சூடு – பலர் உயிரிழப்பு

அமெரிக்காவின் Georgia மாகாணத்தில் புதன்கிழமை பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர்.

சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் CNN தொலைக்காட்சிக்கு தகவல் கொடுத்தனர்.

துப்பாக்கிச் சூடு நடந்த Barrow County பொலிஸ் நிலைய அதிகாரி, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை அதிகாரப்பூர்வமாக உடனடியாக உறுதிப்படுத்தவில்லை.

பொலிசாரின் கூற்றுப்படி, உள்ளூர் நேரப்படி 10:23 மணிக்கு துப்பாக்கிச் சூடு பற்றி அவசரநிலை மையத்திற்கு அழைப்பு வந்தது என்று CNN தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Exit mobile version