பிரான்ஸில் ரயில் நிலையத்தில் நின்ற பயணிக்கு காத்திருந்த அதிர்ச்சி
![](https://iftamil.com/wp-content/uploads/2023/09/inbound2852838971866706958-jpg.webp)
பிரான்ஸில் மெற்றோ நிலையத்தில் வைத்து பயணி ஒருவரிடம் விலையுயர்ந்த கைக்கடிகாரம் ஒன்று திருடப்பட்டுள்ளது.
அதனை திருடி சென்ற திருடர்கள் தப்பிச் சென்றுள்ளனர். செவ்வாய்க்கிழமை இரவு இச்சம்பவம் பரிஸ் 15 ஆம் வட்டாரத்தில் உள்ள La Motte-Picquet-Grenelle மெற்றோ நிலையத்தில் வைத்து இடம்பெற்றுள்ளது.
இரவு 9 மணி அளவில் ரயிலுக்காக காத்திருந்த பயணி ஒருவரை திடீரென சுற்றிவளைத்த குழு ஒன்று, அவரை சரமாரியாக தாக்கியுள்ளார்.
பின்னர் அவரிடம் இருந்த கைக்கடிகாரத்தை கொள்ளையிட்டுச் சென்றனர்.
மிக விரைவாக கொள்ளையர்கள் மெற்றோ நிலையத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.
120,000 யூரோக்கள் மதிப்புள்ள Jaeger-LeCoultre நிறுவனத்தின் கைக்கடிகாரம் ஒன்றே திருடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 11 times, 1 visits today)