Site icon Tamil News

பெண்ணொருவரை கொலை செய்து உடலை குத்கரில் வேகவைத்த நபர்!

மும்பையில் தன்னுடன் இணைந்து வாழ்ந்த பெண்ணை கொலை செய்து உடலை இரண்டு துண்டுகளாக வெட்டி அதை சிறு பாகங்களாக துண்டித்து குக்கரில் வேகவைத்த நபரை பொலிஸார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,மும்பையில் உள்ள பிளாட் ஒன்றில் 56 வயதான நபரும் 36 வயது பெண் சேர்ந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் பொலிஸாருக்கு புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து ஃப்ளாட்டிற்கு வந்த பொலிஸார் வீட்டை சோதனை செய்தபோது அவர்களுக்கு பேரதிச்சி காத்திருந்துள்ளது. ஏனெனில் அங்கே அழுகிய நிலையில் உடல் பாகங்கள் இருந்தன.

இது தொடர்பாக இருவரை பொலிஸார்கைது செய்த நிலையில் சம்பவம் குறித்து துணை ஆணையர் ஜெயந்த் பாஜ்பாலே கூறுகையில், பெண்ணொருவரும் ஆண்ணொருவரும் லிவ் இன் உறவில் இருந்துள்ளனர். இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் அந்தப் பெண் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடலை மர அறுவை இயந்திரம் கொண்டு இரண்டாகத் துண்டித்துள்ளனர்.பின்னர் உடலை சிறு பாகங்களாக வெட்டி அதனை குக்கரில் கொஞ்சம் கொஞ்சமாக வேக வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்தக் கொடூர கொலை தொடர்பாக அந்தப் பெண்ணுடன் வாழ்ந்தவரும் மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மும்மைபொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Exit mobile version