உலகம் செய்தி

200 அடி கோபுரம் மற்றும் டிரான்ஸ்மிட்டர் திருட்டு!! பிரபல வானொலி நிலையம் மூடல்

அலபாமாவில் உள்ள வானொலி நிலையத்திலிருந்து 200 அடி ரேடியோ டவர் மற்றும் டிரான்ஸ்மிட்டரை திருடர்கள் திருடிச் சென்றனர்.  இதனால், ஏஎம் நிலையத்தின் செயல்பாடு நிறுத்தப்பட்டது.

இச்சம்பவம் பிப்ரவரி 2 ஆம் திகதி அலபாமாவின் ஜாஸ்பரில் நடந்தது. இந்த வானொலி ஜாஸ்பர் சமூகத்திற்கான செய்தி மற்றும் தகவல்களின் ஆதாரமாக இருந்தது.

வானொலி நிலையத்தின் பொது மேலாளர் பிரட் எல்மோர், AP செய்தி நிறுவனத்திடம், நிலையம் திருடப்பட்டபோது சமூகம் ஒரு குரலை இழந்ததாகக் கூறினார்.

பிப்ரவரி 2ம் திகதி ஊழியர்கள் ஸ்டேஷனுக்கு வந்தபோது திருட்டு நடந்திருப்பது தெரிந்தது. கோபுரம் மற்றும் அருகிலுள்ள கட்டிடத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த அனைத்து ஒளிபரப்பு சாதனங்களும் திருடப்பட்டதை அவர்கள் கண்டுபிடித்தனர்.

இந்த கோபுரம் 1950 களில் இருந்து உள்ளது. திருடர்கள் அதிநவீன கருவிகளை பயன்படுத்தி கோபுரத்தை உடைத்து சிறிய துண்டுகளாக எடுத்து சென்றிருக்கலாம் என வானொலி நிலைய அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

இந்த சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. கோபுரமோ உபகரணமோ காப்பீடு செய்யப்படவில்லை, புனரமைப்புக்கு $60,000 முதல் $100,000 வரை (சுமார் ரூ. 83 லட்சம்) செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

(Visited 2 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content