Site icon Tamil News

ஜெர்மனியில் 21 வயதான பெண்ணுக்கு 20 வயது இளைஞன் செய்த கொடூரம்

ஜெர்மனியில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதலில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஜெர்மனியில் பீலஃபெலட் நகரத்தில் கோல்ட் ஸ்டக் பேக்கர் என்ற பிரதேசத்தில் கடந்த வாரம் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் 21 வயது பெண் ஒருவரை கத்தியால் குத்தியுள்ளார்.

இந்நிலையில் 21 வயதுடைய பெண் உயிரிழந்ந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்இருவரும் உயிர் காப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டு வந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளார்.

இவர்கள் இரண்டு பேரும் இரவு களியாட்ட நிகழ்வுக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில்இருவருக்குமிடையே வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. இந்த வாக்குவாதம் முறிறய நிலையில் குறித்த இளைஞர் பெண்ணை கத்தியால் குத்தியுள்ளார்.

குறித்த பெண்ணை அவரச சிகிச்சை பிரிவினர் வந்து பரிசோதிப்பதற்கு முன் அவர் பரிதாபமாக பலியாகியுள்ளார். எனினும் இந்த கொலைக்கான உறுதியான காரணம் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Exit mobile version