இலங்கை

மாகாஸ்தோட்ட பகுதியில் கழுத்தில் கயிறு இறுகி 12 வயது சிறுவன் உயிரிழப்பு!

தனிவீட்டில் வசிக்கும் பாடசாலை சிறுவன் ஒருவர் வீட்டுக்கு அருகில் தேயிலை தோட்டத்தில் சவுக்கு மரத்தில் கயிறு கட்டி விளையாடி கொண்டிருந்த போது தனது கழுத்தில் கயிறு இறுகிய நிலையில் உயிரிழந்த சம்பவம் நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உட்பட்ட மாகஸ்தோட்ட பகுதியில் இன்று (11) பகல் 01 மணியலவில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் சிவகுமார் டிலக்சன் வயது (12) என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக நுவரெலியா குற்றப்புலனாய்வு பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,மாகாஸ்தோட்ட பகுதியில் தனிவீட்டில் தாய் மற்றும் பெண் பிள்ளைகள் இருவர் ஆண் பிள்ளை ஒருவருடன் நால்வர் வசித்து வருகின்றனர்.தனது கணவன் இறந்து ஐந்து வருடங்கள் ஆகிய பின் தாய் பிள்ளைகளை படிக்கவைத்து வாழ்ந்து வரும் நிலையில் மூத்த மகள் பல்கலைகழக படிப்புக்கு சென்ற பின் வீட்டில் சிறிய மகள் தாய் மற்றும் சம்பவத்தில் உயிரிழந்த சிறுவன் என மூவர் வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் வழமைப்போல சிறுவன் உயிர் பிரிந்த இடத்தில் சவுக்கு மரம் ஒன்றில் கயிறு கட்டி விளையாடி கொண்டிறுந்துள்ளார்.தாய் தனக்கு தலைவலியென வீட்டில் படுத்து இருந்த நிலையில் பகல் ஒரு மணியலவில் மரத்தில் விளாயாடிய சிறுவன் கழுத்தில் கயறு இறுகி துடிக்கிறான், காப்பாற்றுங்கள் என சம்பவத்தை அவதானித்த அருகில் உள்ள வீட்டார் கூச்சலிட்டுள்ளனர்.இதையடுத்து மரத்துக்கு அருகில் ஒடியவர்கள் சிறுவனை மீட்டப்போதிலும் சிறுவன் மயக்கத்தில் இருப்பதாக உணர்ந்து 1990 அவசர அம்புலன்ஸ்க்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

பின் அவசர அம்புலன்ஸ் வண்டி சம்பவ இடத்திற்கு வருகை தந்து வைத்தியர்கள் சிறுவனை பரிசோதித்த போது சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.அதேநேரத்தில் சம்பவ இடத்திற்கு நுவரெலியா பொலிஸார் விரைந்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.மேலும் சடலம் நுவரெலியா மாவட்ட நீதவானின் மரண விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின் பிரேத பரிசோதணைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக விசாரணைகளை முன்னெடுக்கும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

(Visited 6 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content