இலங்கை

பிரகீத் எக்னலிக்கொடா கடத்தப்பட்டு 5000 நாட்கள் – நீதிக்கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

வலிந்து கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிக்கொடா கடத்தப்பட்டு 5000 நாட்கள் கடந்துள்ள நிலையில் அவருக்கான நீதிக்கோரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை மட்டக்களப்பில் முன்னெடுத்துள்ளனர்.

பகல் 12 மணியளவில் காந்தி பூங்காவில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் தூபிக்கு முன்பாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் உளவியலாளர் ஒன்றியம் மட்டு ஊடக அமையும் ஏற்பாடு செய்திருந்தது.

இதன் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் எக்னலி கொடவிற்கான சர்வதேச விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட கடத்தப்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் ஒரு சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

இன்று தெற்கில் உள்ள பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது பிரச்சினைகளுக்கு சர்வதேச விசாரணை கூறுகின்றனர் ஆனால் கடத்தியும் காணாமல் ஆக்கப்பட்டும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கும் நீதியான விசாரணை பொறிமுறை ஒன்று இலங்கையில் இதுவரையில் நேர்த்தியாக முன்னெடுக்கப்படவில்லை ஆகவே இதற்கான ஒரு சர்வதேச பொறிமுறை மூலமாக ஒரு விசாரணை நடத்தப்படும் பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

See also  ஜனவரி முதல் வாகனங்களை இறக்குமதி

கொழும்பில் கடத்தப்பட்டு அக்கரைப்பற்றில் அவரது இறுதி மூச்சு நிறுத்தப்பட்டுள்ளதாக அவருடைய துணைவி சந்தியா எக்னலிகொட கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக அக்கரைப்பற்றில் உள்ள ஒரு காளி கோயிலில் ஒரு விசேட பூசையினை நடத்தி இருந்தார்.

தனது கணவனை தேடி இன்றுடன் 5000 நாட்கள் கடந்துள்ள போதிலும் அவருக்கான ஒரு நீதியான விசாரணையோ அல்லது சர்வதேச விசாரணை இன்று வரைக்கும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 4 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content