Site icon Tamil News

ஒக்டோபர் மாதத்தில் மொத்தம் 399 யானைகள் உயிரிழப்பு…!

ஒக்டோபர் மாதத்தில் மொத்தம் 399 யானைகள் உயிரிழந்துள்ளதாகவும், அவற்றில் பெரும்பாலானவை யானைகள் மற்றும் மனித மோதல்கள் காரணமாகவும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் காரணமாகவும் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இயற்கை காரணங்களுக்காகவும் கணிசமான எண்ணிக்கையிலான காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக திணைக்களத்தின் விளம்பர அதிகாரி ஹாசினி சரத்சந்திர தெரிவித்துள்ளார்.

இதன்படி துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 74 யானைகளும், மின்சாரம் தாக்கி 47 யானைகளும், ஹக்கபட்டாஸ் பாவனையால் 39 யானைகளும், விஷவாயு தாக்கி 3 யானைகளும், புகையிரத விபத்தில் 19 யானைகளும், வீதி விபத்தில் ஒரு யானையும், விவசாய கிணற்றில் விழுந்து நான்கு யானைகளும் உயிரிழந்துள்ளன. மற்றும் பல்வேறு சம்பவங்கள் காரணமாக 15 உயிரிழந்துள்ளன என வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

மீதமுள்ள இறப்புகள் முதுமை மற்றும் இயற்கை பேரழிவுகள் போன்ற இயற்கை காரணங்களால் பதிவாகியுள்ளதாக அவர் கூறினார்.

2022 ஆம் ஆண்டு யானைகள் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் பதிவாகியுள்ள ஆண்டாகும், அது 439 ஆகும் என்று அவர் கூறினார்.

“தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு, 2022 உடன் ஒப்பிடும் போது, இலங்கை வரலாற்றில் யானை மரணங்கள் அதிக எண்ணிக்கையில் பதிவாகும் வாய்ப்புகள் அதிகம்” என ஹாசினி சரத்சந்திர மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version