உலகம் செய்தி

அரபிக்கடலில் 19 பாகிஸ்தான் மாலுமிகள் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டனர்

சோமாலியாவுக்கு அப்பால் அரபிக்கடலில்  19 பாகிஸ்தான் மாலுமிகள் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளனர்.

ஈரானின் கொடியுடன் கூடிய கப்பலில் இருந்து வந்த 11 ஆயுதம் தாங்கிய கொள்ளையர்கள் குறித்த பாகிஸ்தான் மீன்பிடி படகுக்குள் நுழைந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அப்போது பாகிஸ்தான்  மீனவர்களை கடற்கொள்ளையர்கள் தங்கள் காவலில் எடுத்துக்கொண்டனர்.

எனினும், அந்தந்த கடல் எல்லையில் ரோந்து வந்த இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சுமித்ரா போர்க்கப்பல் மூலம் பாகிஸ்தான் மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

36 மணி நேரத்திற்குள் கப்பல் மேற்கொண்ட இரண்டாவது கடற்கொள்ளையர் எதிர்ப்பு நடவடிக்கை இது என்பதை இந்திய கடற்படையும் உறுதி செய்துள்ளது.

(Visited 3 times, 1 visits today)
See also  கொழும்பு அம்மன் கோவிலில் இராணுவ தளபதி விக்கும் லியனகே தலைமையில் இடம்பெற்ற சிறப்பு பூஜை
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content