Site icon Tamil News

11 கிலோ தங்கத்தை ஜெல் வடிவில் கடத்த முற்பட்ட நால்வர் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக சட்டவிரோதமான முறையில் பல கோடி ரூபா பெறுமதியான தங்கத்துடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நால்வரும்,  விமான நிலைய பாதுகாப்பு  பிரிவினர் மற்றும் சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விமான நிலையத்திலிருந்து 11 கிலோ தங்கத்தை  ஜெல் வடிவில் ஆக்கப்பட்டு பார்சல்களில் அடைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

வெளிநாடு ஒன்றிலிருந்து வந்த பயணி ஒருவர் இந்த தங்க கையிருப்பை  பயணிகள் பரிமாற்று பகுதியில் உள்ள  குறித்த வரியில்லாத வர்த்தக நிலையம் ஒன்றின் முகாமையாளரிடம்  கொடுத்துள்ளார்.

பின்னர் அந்த முகாமையாளர் அதனை நாட்டுக்குள்  கடத்திச் செல்ல  முற்பட்டபோது கைது செய்யப்பட்டார்.

Exit mobile version