Site icon Tamil News

வலி. கிழக்கு பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் மீது வாள்வெட்டு!

வலி. கிழக்கு பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் செல்வராசா மற்றும் அவரின் மனைவி ஆகியோர் மீது கும்பல் ஒன்று வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளானவர்கள் யாழ்ட போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம்  நேற்று (வியாழக்கிழமை)  இரவு 8.30 மணி அளவில் கோப்பாய், மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள அவரது வீட்டுக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

பிரதேச சபை உறுப்பினரும் அவரது மனைவியும் ஆலய திருவிழாவில் கலந்து கொண்டுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது அவர்களை பின்தொடர்ந்த மூவர் அவர்களின் வீட்டிற்கு முன்பாக வழிமறித்து மனைவி  அணிந்திருந்த தங்க நகைகளை அறுக்க முற்பட்டுள்ளனர். இதன்போதே தாக்குதல் நடத்தப்பட்டதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Exit mobile version