Site icon Tamil News

ரஷ்யாவிற்குள் நுழைய 50 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ள குடும்பம்!

போருக்கு எதிரான பிரச்சாரங்களில் ஈடுபட்ட குடும்பம் ஒன்று ரஷ்யாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

அர்ஷக் மகிச்சியன் என்ற குடும்பத்திற்கே 50 ஆண்டுகள் ரஷ்யாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் -ரஷ்யா  போரில் இருந்து தப்பி பிழைத்த அர்ஷக் மகிச்சியன் மற்றும் அவரது குடும்பத்தினர் தற்போது ஜேர்மனியில் வசித்து வருகின்றனர்.

இவர்கள் போருக்கு எதிராக பிரச்சாரம் செய்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்நிலையில். அவர்களுடைய குடும்பத்தினர் ரஷயாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மகிச்சியனின் தந்தை மற்றும் அவரது சகோதரரின் ரஷ்ய குடியுரிமை பறிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version