Site icon Tamil News

மலாலா தயாரித்துள்ள ஆவணப்படம் ஒஸ்காருக்கு தேர்வு.

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதலுக்கு இலக்காகி வெளிநாடுகளின் உதவியோடு உயிர் பிழைத்து தற்போது லண்டலின் வாழ்ந்துவரும் மலாலா தற்போது  சொந்தமாக திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

குறிப்பிட்ட சமூகத்தினர் மீதான வெறுப்புணர்வுக்கு எதிராக சமீபத்தில் அவர் தயாரித்திருந்த ஸ்ட்ரேஞ்சர் ஒப் தி கேட் ஆவணப்படம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.

இந்நிலையில் மலாலாவின் ஸ்ட்ரேஞ்சர் ஒப் தி கேட் ஆவணப்படம் ஒஸ்கார் விருதுக்கான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஒஸ்கார்  விருதுக்கான ஷார்ட் டாகுமென்டரி பிரிவில் மலாலாவின் ஸ்ட்ரேஞ்சர் அட் தி கேட் ஆவணப்படம் போட்டியிடுகிறது.

இஸ்லாமிய சங்கத்தினர் மீதான வெறுப்புணர்வுக்கு எதிரான கதைக்களத்தை மலாலாவின் ஆவணப்படம் கொண்டிருக்கிறது

Exit mobile version