Site icon Tamil News

பிரான்ஸில் மனைவிக்கு கணவர் செய்த கொடூரம்!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸை சேர்ந்த பெண் ஒருவர்  கத்திக்குத்துக்கு இலக்காகி கொல்லப்பட்டுள்ளார்.

12 ஆம் வட்டாரத்தின் rue Prague வீதியில் உள்ள வீடொன்றின் முன்பாக வீதிக்கு அருகே குறித்த பெண் இறந்து கிடந்துள்ளார்.

கழுத்து உட்பட பல இடங்களில் வெட்டுக்காயங்களுக்கு உள்ளான குறித்த பெண், இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை 9 மணிக்கு காவல்துறையினர் மற்றும் மருத்துவக்குழுவினர் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர். சடலம் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில், தாக்குதல் நடத்திய நபர் சில நிமிடங்களிலேயே பரிஸ் 11 ஆம் வட்டாரத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அங்குள்ள தேவாலயம் ஒன்றின் பின்னால் ஒளிந்திருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் வட்டார காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்டவர் கொல்லப்பட்ட பெண்ணின் கணவர் என அறிய முடிகிறது.

Exit mobile version