Site icon Tamil News

பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக கைவிடுவிதற்கு GMOA தீர்மானம்!

அரசாங்கத்தின் முறையற்ற வரிக்கொள்கை, ஊதிய உயர்வு என பல்வேறு காரணிகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில், போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில்,  பணிப்புறக்கணிப்பை நாளை முதல் தற்காலிகமாக  கைவிடுவதற்கு  அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி நாளை (16)  காலை 8 மணி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தினால் தொழில் வல்லுநர்கள் சங்கத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version