Site icon Tamil News

பக்முட் நகரின் மூன்று மாவட்டங்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ள ரஷ்யா!

மேற்கு பாக்முட்டின் மேலும் மூன்று மாவட்டங்களை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

கிழக்கு உக்ரைனின் டோனெட்ஸ்க் பகுதியில் உள்ள இந்த நகரம் ரஷ்ய மற்றும் உக்ரேனிய துருப்புக்களுக்கு இடையேயான சில கடுமையான போர்களின் மையமாக உள்ளது.

க்ரம்ளினின் படையெடுப்புத் திட்டத்தில் மூலோபாய ரீதியில் முக்கிய பகுதியாக பக்முட் கருதப்படுகிறது.

எவ்வாறாயினும், ரஷ்ய துருப்புக்கள் சில முன்னேற்றங்களைச் செய்திருந்தாலும், நிலைமை கட்டுக்குள் இருப்பதாக  உக்ரைன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version