Site icon Tamil News

தெற்கு பிலிப்பைன்ஸில் 6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

தெற்கு பிலிப்பைன்ஸில் இன்று (செவ்வாய்க்கிழமை) சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மிண்டனாவ் தீவில் உள்ள மலை சார்ந்த தங்கச் சுரங்க மாகாணமான தாவோ டி ஓரோவில் உள்ள மரகுசன் நகராட்சியிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் ஆழமற்ற நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஆழமற்ற நிலநடுக்கங்கள் ஆழமான நிலநடுக்கங்களை விட அதிக தீங்கு விளைவிக்கும் என்பதால், சேதம் குறித்து உடனடியாக உறுதிப்படுத்தப்பட்ட அறிக்கைகள் எதுவும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு பற்றிய அறிக்கைகளை அதிகாரிகள் சரிபார்த்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version