Site icon Tamil News

ஜெர்மனியில் பணியாற்ற விரும்பும் இலங்கையர்களுக்கு வெளியான தகவல்

ஜெர்மனி மொழியை இலவசமாகக் இலங்கையர்களுக்கு கற்பதற்கான பாடநெறி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும், இலங்கை பத்திரிகை சபையின் தலைவரராகவும் செயற்படுபவரால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பல்வேறு நடவடிக்கைகள் மூலம் இந்த பாடத்திட்டத்தை அவர் தொடங்கியுள்ளார், மேலும் பல இணையத்தள சேவைகள் ஊடாக இதனை கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொழில்மயமாக்கலில் உலகின் முன்னணி நாடான ஜெர்மனியில் அடுத்த சில ஆண்டுகளில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையர்களும் ஜேர்மனியில் தொழில்களுக்குச் செல்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

அத்துடன்,ஜெர்மன் மொழிப் புலமைப் பரீட்சையில் சித்தியடைவது அதற்கான அடிப்படை நிபந்தனையாகும்.

அதற்கமைய, இந்த நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

Exit mobile version