ஐரோப்பா செய்தி

ஜெர்மனியிலிருந்து குடும்பத்துடன் இலங்கை சென்றவருக்கு நேர்ந்த பரிதாகம்

கண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் தங்கியிருந்த ஜெர்மன் பிரஜை ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தான் தங்கியிருந்த கண்டி நட்சத்திர ஹோட்டலின் குளியலறையில் சறுக்கி விழுந்தமையினால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

குறித்த நபர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த ஜேர்மனியைச் சேர்ந்த 47 வயதுடைய யோர்க் சீமர்ஸ் (Jorg Siemers ) என்பவரே இதன் போது உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

அவர் கடந்த 25 நாட்களுக்கு முன்னர் தனது மனைவி மற்றும் பத்து வயது மகனுடன் இலங்கைக்கு வந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கண்டி தேசிய வைத்தியசாலையின் சட்ட வைத்தியர்,ஜேர்மன் பிரஜையின் பிரேத பரிசோதனையின் பின்னரே மரணத்திற்கான காரணத்தை அறிவிக்க முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஜெர்மன் தூதரகத்திற்கு அறிவிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கண்டி சுற்றுலா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 4 times, 1 visits today)
Avatar

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content