ஆசியா

ஜப்பானில் அச்சுறுத்தும் பறவை காய்ச்சல் – 3.30 லட்சம் கோழிகளை அழிக்க திட்டம்

கிழக்கு ஆசிய நாடான ஜப்பானின் ஒகயாமா மாகாணத்தில் பறவை காய்ச்சல் தொற்று தீவிரமடைந்துள்ளது.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் முதலில் பறசை காய்ச்சல் கண்டறியப்பட்டது.

இதைத்தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளில் பறவை காய்ச்சல் தீவிரமாக பரவத் தொடங்கியது.

இதுவரை 25 மாகாணங்களில் பறவைக்காய்ச்சல் பரவி உள்ளதாகவும், சுமார் 15 மில்லியன் பறவைகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஜப்பானின் அமோரி மாகாணத்தில் உள்ள ஒரு கோழி பண்ணையில் திடீரென்று கோழிகளின் இறப்பு விகிதம் அதிகரித்த நிலையில், உடனடியாக நோய் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் பரிசோதனை செய்த 13ல் 11 கோழிகளுக்கு பறவை காய்ச்சல் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதைத் தொடர்ந்து பண்ணையில் உள்ள 3.30 லட்சம் கோழிகளை உடனடியாக அழிக்க முடிவு செய்துள்ளனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பண்ணை முழுவதும் கிருமி நீக்கம் செய்யப்பட்டது. பண்ணையிலிருந்து 1.8 கி.மீ தொலைவு வரை கோழிகள் மற்றும் அதன் முட்டைகளை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகளவு பறவைக் காய்ச்சல் தொற்று பரவிவருவது குறிப்பிடத்தக்கது.

See also  வியட்நாமில் உள்ள உயிரியல் பூங்காவில் H5N1 பறவைக் காய்ச்சல் வைரஸ் காரணமாக 47 புலிகள் பலி!

 

(Visited 1 times, 1 visits today)
Avatar

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content