சிட்னி கடற்கரையில் சுறாவால் தாக்கப்பட்டு தந்தை மரணம்

பிரபலமான சிட்னி கடற்கரையில் சுறாவால் தாக்கப்பட்டு தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தத் தாக்குதல் நேற்று காலை 10 மணியளவில் Dee Whyயில் உள்ள Long Reef கடற்கரையில் நடந்தது.
ஒரு இளம் மகள் உள்ள அந்த நபர், அனுபவம் வாய்ந்த surfer என்று கருதப்படுகிறது.
கடற்கரையிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் அவர் தாக்கப்பட்டு சுமார் அரை மணி நேரம் தண்ணீரில் இருந்தார்.
பின்னர் அவர் கரைக்குக் கொண்டுவரப்பட்டார், ஆனால் அதிக இரத்தப்போக்கு காரணமாக இறந்தார் என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்த துயர சம்பவத்திற்குப் பிறகு Dee Why 72 மணி நேரம் வரை மூடப்பட வாய்ப்புள்ளது, அதே நேரத்தில் நாராபீன் மற்றும் மேன்லி இடையேயான அண்டை கடற்கரைகள் அடுத்த 24 மணி நேரத்திற்கு மூடப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
சுறா வலைகளை அகற்றுவது குறித்து கவுன்சில்கள் விசாரணை நடத்தத் தயாராகி வரும் நிலையில் இந்தத் தாக்குதல் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.