Site icon Tamil News

சட்டவிரோத பயணம் தொடர்பில் அவுஸ்ரேலிய தூவர் இலங்கையர்களுக்கு கடும் எச்சரிக்கை!

இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக நுழையமுயல்பவர்களிற்கு அவுஸ்திரேலிய தூதுவர் போல் ஸ்டீபன்ஸ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்குள் நுழைவதற்கு சிறிய வாய்ப்புகூட இல்லை என தெரிவித்துள்ள அவர்,  ஆட்கடத்தலை கட்டுப்படுத்துவதற்காக அவுஸ்திரேலியாவும் இலங்கையும் இணைந்து செயற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆட்கடத்தல் என்பது புதிய விடயமல்ல பல வருடங்களாக காணப்படுகின்றது இலங்கை இந்த விடயத்தை கையாளும் திறனை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் அவுஸ்திரேலியா ஈடுபட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைவதற்கு எவராவது விரும்பினால்அதற்கான சிறிதளவு வாய்ப்பும் இல்லை என்பதை தெரிவிப்பதற்கான தீவிரபிரச்சாரம் இலங்கையில் இடம்பெறுகின்றது எனவும்  எந்த படகும் இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவை சென்றடையவில்லை சட்டவிரோத குடியேற்றவாசிகள் எவரும் அவுஸ்திரேலியாவை சென்றடையவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version