செய்தி

கொழும்பில் 67வது மாடியில் இருந்து கீழே விழுந்து மாணவனும் மாணவியும் பலி

கொழும்பில் 67ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்து மாணவனும் மாணவியும் உயிரிழந்தனர்.

கொம்பனிதெருவில் உள்ள சொகுசு குடியிருப்பு கட்டடத்தில் இருந்து கீழே விழுந்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்கள் வெள்ளவத்தை மற்றும் களனி பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த மாணவியும், மாணவனும் கொழும்பு கறுவாத்தோட்டம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் ஒரே வகுப்பில் கல்வி கற்று வந்தனர்.

அடுக்குமாடி குடியிருப்பின் 67ஆவது மாடியில் இருந்து இருவரும் கீழே விழுந்த நிலையில், 3ஆவது மாடியின் மேல்தளத்தில் விழுந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை சம்பவம் தொடர்பில் கொம்பனித்தெரு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

(Visited 5 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content