Site icon Tamil News

கொழும்பில் 67வது மாடியில் இருந்து கீழே விழுந்து மாணவனும் மாணவியும் பலி

கொழும்பில் 67ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்து மாணவனும் மாணவியும் உயிரிழந்தனர்.

கொம்பனிதெருவில் உள்ள சொகுசு குடியிருப்பு கட்டடத்தில் இருந்து கீழே விழுந்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்கள் வெள்ளவத்தை மற்றும் களனி பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த மாணவியும், மாணவனும் கொழும்பு கறுவாத்தோட்டம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் ஒரே வகுப்பில் கல்வி கற்று வந்தனர்.

அடுக்குமாடி குடியிருப்பின் 67ஆவது மாடியில் இருந்து இருவரும் கீழே விழுந்த நிலையில், 3ஆவது மாடியின் மேல்தளத்தில் விழுந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை சம்பவம் தொடர்பில் கொம்பனித்தெரு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Exit mobile version