Site icon Tamil News

கிழக்கு ஸ்பெயினில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றம்

கிழக்கு ஸ்பெயினில் வியாழன் அன்று ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக, நூற்றுக்கணக்கான மக்களை அருகிலுள்ள கிராமங்களில் இருந்து வெளியேற்றபட்டுள்ளனர்.

காட்டுத்தீ காரணாமாக ஏற்பட்ட பெரும் புகை மூட்டம் காரணமாக அப்பகுதி கற்று மாசடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலென்சியா பகுதியில் உள்ள வில்லனுவேவா டி விவர் அருகே தீப்பற்றி எரிந்த நிலையில்,  பத்து விமானங்கள் தீயை அணைக்க பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதனால் மூன்று கிராமங்களின் மக்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதனால்  1,000 க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version