Site icon Tamil News

ஈஸ்டர் ஞாயிறு அன்று 700 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் அறிவிப்பு!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் அன்று ஏறக்குறைய 700 ரஷ்ய துருப்புகள் கொல்லப்பட்டதாக உக்ரைன் கூறியுள்ளது.

போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யாவின் தினசரி இழப்புகள் குறித்த விபரத்தை உக்ரைன் வெளியிட்டுள்ளது.

இதன்படி பெப்ரவரி 2022 இல் இருந்து இதுவரை 178820 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 670 பேர் உயிரிழந்துள்ளதாகவும், உக்ரைன் அறிவித்துள்ளது.

இந்த விவரங்கள் சரிபார்க்கப்படவில்லை. இருப்பினும் மோதலின்போது சர்வதேச நிறுவனங்கள் மதிப்பிட்டுள்ளதை விட உக்ரைனின் மதிப்பீடுகள் அதிகமாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Exit mobile version