Site icon Tamil News

இளம் பெண் சட்டத்தரணி சடலமாக மீட்பு

இளம் பெண் வழக்கறிஞர் ஒருவரின் சடலம் அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பெல்மடுல்ல புலத்வெல்கொடவில் உள்ள வீடொன்றில் இது இடம்பெற்றுள்ளது.

40 வயதுடைய சட்டத்தரணியான துஷ்மந்தி அபேரத்னவின் சடலம் இன்று (31) காலை அவரது வீட்டின் படுக்கையறையிலுள்ள படுக்கையில் மீட்கப்பட்டதாக பெல்மடுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றிரவு (30) முதல் சட்டத்தரணியின் கணவர் வீட்டில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சட்டத்தரணியின் குடும்பத்தினர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

உயிரிழந்த சட்டத்தரணி நேற்று இரவு தனது கையடக்கத் தொலைபேசியில் குடும்பஸ்தர் ஒருவருக்கு அனுப்பிய குறுஞ்செய்தி தொடர்பிலும் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அந்த குறுஞ்செய்தியில் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட தகவல் இருந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

Exit mobile version