Site icon Tamil News

இலங்கை கல்வி அமைச்சர் விடுத்துள்ள விசேட கோரிக்கை

மாணவர்களின் எதிர்கால நலன்கருதி உயர்தர பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணியில் இணைந்து கொள்ளுமாறு கல்வியமைச்சர் சுசில் பிரேமயஜயந்த உரிய

தரப்புக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 22ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் தொழிற்சங்க நடவடிக்கைகளினால் தாமதம் அடைந்தன.

இந்த நடவடிக்கை மேலும் தாமதம் அடையுமாயின் அது மேலும் இரண்டு பரீட்சைகளையும் தாமதமாக்கும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கைகளினால் எதிர்வரும் சாதாரண தர பரீட்சையும் தாமதம் அடையாளம் என அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்வாறான செயற்பாடுகளினால் 40 இலட்சம் மாணவர்களின் எதிர்காலத்திற்கு பாதிப்பு ஏற்படலாம் என்றும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சுட்டிக்காட்டினார்.

Exit mobile version