இலங்கை அரச அதிகாரிகளுக்கு அறிமுகமாகும் டிஜிட்டல் கையொப்பம்!

இலங்கை அரச அதிகாரிகளுக்கு டிஜிட்டல் கையொப்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அலுவலகப் பணிகளை எளிதானதாகவும், வினைத்திறனானதாகவும் மாற்ற இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் பொதுச் சேவைகளை டிஜிட்டல் மயமாக்கி புதிய பாதைக்குக் கொண்டு செல்வதுதான் என பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வைத்தியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் உள்நாட்டு அலுவல்கள் பிரிவின் பொது அதிகாரிகளுக்கான டிஜிட்டல் கையொப்பங்களை அங்கீகரிக்கும் நிகழ்வில் நேற்று பங்கேற்றபோது அவர் இவ்வாறு கூறினார்.
மக்கள் எதிர்பார்க்கும் திறமையான பொதுச் சேவையை உருவாக்குவதே தனது நோக்கம் என்றும், இந்த புதிய தொழில்நுட்பத்தைக் கிராம சேவையாளரிடம் எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார்.