Site icon Tamil News

இலங்கையிடம் குரங்குகளை கேட்கவில்லை!! சீனா மறுப்பு

சீன தேசிய வனவியல் நிர்வாகத்துடன் இணைந்த எந்தவொரு பிரிவினரும் 100,000 மக்காக் குரங்குகளை இலங்கையிடம் கோரவில்லை என கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

பரிசோதனை நோக்கத்திற்காக ஒரு சீன தனியார் நிறுவனத்திற்கு 100,000 மக்காக் குரங்குகளை ஏற்றுமதி செய்வது தொடர்பில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊடகங்களில் சமீபத்திய தவறான தகவல்களை கவனித்த பின்னர், தூதரகம் இந்த அறிப்பை வெளியிட்டுள்ளது.

பெய்ஜிங்கில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் சரிபார்த்ததாக தூதரகம் குறிப்பிட்டது.

கொழும்பில் உள்ள சீனத் தூதரகம், சீன தேசிய வனவியல் மற்றும் புல்வெளி நிர்வாகம், இந்த கோரிக்கையை அறிந்திருக்கவில்லை என்றும் எந்தவொரு தரப்பிலிருந்தும் அத்தகைய விண்ணப்பம் பெறப்படவில்லை என்றும் தெளிவாக தெளிவுபடுத்தியுள்ளது.

சீனா ஏற்கனவே 1988 ஆம் ஆண்டில் அதன் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தை பல திருத்தங்களுடன் ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை தூதரகம் மேலும் வலியுறுத்த விரும்புகிறது.

சீன அரசாங்கம் எப்போதும் வனவிலங்கு பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் சர்வதேச கடமைகளை தீவிரமாக நிறைவேற்றுகிறது என சீனத் தூதரகம் கூறியுள்ளது.

Exit mobile version