Site icon Tamil News

இத்தாலியில் நடுக்கடலில் சிக்கித் தவித்த 211 அகதிகள் – போராடி காப்பாற்றிய அதிகாரிகள்

இத்தாலியின் லம்பேடுசா தீவு பகுதியின் அருகே நேற்று சீரற்ற வானிலை காரணமாக மீன்பிடி படகில் சென்ற 211 அகதிகள் நடுக்கடலில் சிக்கிக் கொண்டனர்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த இத்தாலி கடலோர காவல் படையினர், நடுக்கடலில் சிக்கி தவித்த 211 அகதிகளை பத்திரமாக மீட்டனர்.

இது தொடர்பாக கடலோர காவல் படையினர் கூறும்பொழுது, இத்தாலியின் தெற்கு கடலோரப் பகுதியில் அகதிகள் படகு தத்தளிப்பதை பற்றி தகவல் அறிந்ததும், விரைந்து சென்று 2 ரோந்து படகின் மூலம் அகதிகள் மீட்கப்பட்டதாகவும், அதில் சந்தேகத்திற்குரிய இரண்டு நபர்களை கைது செய்து காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

இதற்கு முன்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இத்தாலி கடல்பகுதியில் அகதிகள் படகு கவிழ்ந்து 68 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version