Site icon Tamil News

வீட்டிற்கு சிலிண்டர்களை சுமந்துவராததால் மாணவருக்கு ஆசிரியர் கொடுத்த தண்டனை!

இரு சமையல் எரிவாயு சிலிண்டர்களை தனது வீட்டிற்கு சுமந்து வராமையினால் ஆசிரியர் ஒருவர் மாணவரை தாக்கிய சம்பவம் மாத்தளை நாவுல பகுதியில் பதிவாகியுள்ளது.

பாடசாலையிலிருந்து தனது வீட்டிற்கு இரு சமையல் எரிவாயு சிலிண்டர்களை சுமந்து வருமாறு ஆசிரியர் மாணவரிடம் பணித்துள்ளார்.எனினும் மாணவர் ஆசிரியரின் கட்டளையை ஏற்க மறுப்பு தெரிவித்ததுடன், ஆசிரியரால் மாணவர் தாக்கப்பட்டுள்ளார்.

10 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவர் ஒருவரே இவ்வாறு ஆசிரியரால் தாக்கப்பட்ட நிலையில் அம்பான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் தம்புள்ளை வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார்.இந்த நிலையில், பெற்றோரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய ஆசிரியர் காவல் துறையினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

அதன்படி குறித்த மாணவர் தமது கட்டளையை நிறைவேற்றாமையினால் ஏற்பட்ட கோபத்தில் தாக்கியதாக ஆசிரியர் ஒப்புக்கொண்டுள்ளதோடு, மாணவர் மீது வேறு எவ்வித கோபமும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.மேலும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றர்.

Exit mobile version