யாழில் சிங்களத்தில் மாற்றப்பட்ட வீதியின் பெயரால் பரபரப்பு!

யாழ்ப்பாணம் நயினாதீவில் வீதி ஒன்றின் பெயர் சிங்களத்தில் மாற்றப்பட்டுள்ளமையானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நயினாதீவில் அமைந்துள்ள வீதி ஒன்றின் பெயர் அதிமேதகு சங்கைக்குரிய பிரஹ்மனவத்தே தம்மகித்தி திஸ்ஸ பெரஹெர மாவத்தை என சிங்களத்தில் மாற்றப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக வடக்கு கிழக்கில் பௌத்தமயமாக்கல் நடவடிக்கை துரித கதியில் இடம்பெற்றுவரும் இந்த நேரத்தில் இரவோடிரவாக இந்த பெயர்மாற்றமும் இடம்பெற்றுள்ளது.
இது தற்போதைய அரசாங்கத்தின் சிங்கள மயமாக்கல் செயற்பாடு என பிரதேச மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
(Visited 10 times, 1 visits today)