Site icon Tamil News

மனைவியை நிர்வாணமாக்கி மிளகாய் பூசிய கணவன் – இலங்கையில் நடந்த கொடூ

மனைவியை, நிர்வாணமாக்கி கை கால்களைக் கட்டி, மிளகாயை நசுக்கி, அந்தரங்கப் பகுதிக்குள் புகுத்திய கணவனை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுக்க பொலிஸார் தெரிவித்தனர்.

பாதுக்க அங்கம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயொருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கணவர் தனது கை, கால்களைக் கட்டி, மிளகாயை நசுக்கி அந்தரங்கப் பகுதியில்  செலுத்தியதாகவும், புழுக்களை எடுத்து உடலில் செருகுவார் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஒரு சந்தர்ப்பத்தில், தனது கணவரும் தனது அந்தரங்கப் பகுதியில் மரக் குச்சியை செலுத்தியதாகவும் அவர் மேலும் கூறுகிறார்.

இந்த மனிதாபிமானமற்ற சித்திரவதை தனது 11 வயது மகளின் கண் முன்னே நடந்ததாகவும், தனது மகளும் மிகவும் சிரமத்தில் இருப்பதாகவும், தனது கைகளில் நான்கு மாத குழந்தையும் இருப்பதாகவும் அந்த பெண் கூறியுள்ளார்.

குறித்த பெண் சிகிச்சைக்காக பாதுக்க மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது அனுராதபுரத்தில் உள்ள தனது பெற்றோரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

பாதுக்க காவற்துறையில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குறித்த பெண்ணிடம் கிராமத்திற்கு செல்வதற்காக பணம் வசூல் செய்து கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபரின் கணவர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும் அவரைக் கைது செய்ய பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுக்க பொலிஸார் தெரிவித்தனர்.

Exit mobile version