Site icon Tamil News

பிலிப் குணவர்தனவின் 51 ஆவது நினைவுதின நிகழ்வு ஜளாதிபதி தலைமையில்

தலைசிறந்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான பிலிப் குணவர்தனவின் 51ஆவது நினைவுதின நிகழ்வு நேற்று (29) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

பிலிப் குணவர்தன நினைவுதின  நிகழ்வுக்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை, பிரதமர் தினேஷ் குணவர்தன வரவேற்று, விழா மண்டபத்திற்கு அழைத்துச் சென்றார்.

நினைவுதின நிகழ்வில், ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் வரலாற்றாசிரியர், கலைத்துறை விசாரத மற்றும் சர்வதேச திரைப்பட விருது பெற்றவருமான கலாநிதி சிங்கராஜ தம்மித்த தெல்கொட ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

பிலிப் குணவர்தன அவர்களின் வாழ்க்கை பற்றிய குறுந்திரைப்படமும் திரையிடப்பட்டதுடன், பிலிப் குணவர்தனவிற்காக உருவாக்கப்பட்ட பாடலும் வெளியிடப்பட்டது.

Exit mobile version