Site icon Tamil News

பிரித்தானியாவில் பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பிய தமிழர்

பிரித்தானியாவில் பொலிஸ் பிடியிலிருந்து தப்பிய தமிழர் ஒருவரை கைது செய்யும் முயற்சியில் அந்நாட்டு பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக பொலிஸார் பொது மக்களின் உதவியை கோரியுள்ளனர்.

லண்டன் இல்ஃபோர்ட் பகுதியில் 35 வயதான பாலசங்கர் நாராயணன் தமிழரொருவர் பொலிஸாரின் பிடியிலிருந்து இவ்வாறு தப்பிச்சென்றுள்ளார்.

சந்தேகநபர் பொலிஸாரிடமிருந்து தப்பிச்சென்ற போது நீல நிற டிராக்சூட்டில் இருந்ததாகவும், இவர் மிகவும் ஆபத்தானவர் என்பதனால் அவரை யாரும் நெருங்க வேண்டாம் எனவும் மாநகர பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் சந்தேகநபரை அடையாளம் காண நேர்ந்தால், அவரை நெருங்காமல் 999 இலக்கத்திற்கு தகவல் தெரிவிக்குமாறும் பொலிஸார் பொதுமக்களிடம் உதவிகோரியுள்ளனர்.

சந்தேகநபர் நியூஹாம், கிரீன்ஃபோர்ட், ஹேமர்ஸ்மித், ஹைகேட் மற்றும் இல்ஃபோர்ட் பகுதிகளில் அவருக்கு அடைக்கலம் வழங்கப்படலாம் எனவும், நாட்டில் அவர் எங்கு வேண்டுமானாலும் அவர் மறைவாக இருக்கலாம் எனவும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

Exit mobile version