Site icon Tamil News

பாடசாலை மாணவர்கள் மீது தாக்குதல் – நான்கு ஆசிரியர்கள் உள்ளிட்டவர்கள் கைது

பொக்காவல பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் பாடசாலை ஒன்றில் கடந்த 12 ஆம் திகதி இரவு 10 பாடசாலை மாணவர்களை (5 சிறுவர்கள் மற்றும் 5 பெண்கள்) கொடூரமாக தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் குறித்த பாடசாலையின் நான்கு ஆசிரியர்கள் மற்றும் இரண்டு விடுதி கண்காணிப்பாளர்களை கண்டி பிரதேச சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் கைது செய்துள்ளது.

இன்று (14) கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் எதிர்வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பாடசாலையின் அதிபர் உள்ளிட்ட ஆசிரியர்கள் மீது இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. கொடூரமாக தாக்கப்பட்ட குழந்தைகள் கண்டி வைத்தியசாலையில் உள்ள சட்ட வைத்தியரிடம் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Exit mobile version