Site icon Tamil News

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து ஆராய்வு!

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து தொழிற்சங்கங்கள் இன்று ஆராயவுள்ளன.

சிவில் சமூகத்தினர் தொழிற்சங்கங்கள் உட்பட பல அமைப்புகள் உத்தேச பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து கரிசனை வெளியிட்டுள்ள நிலையிலேயே தொழிற்சங்கங்கள்  பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து ஆராயவுள்ளன.

உத்தேச பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து ஆராய்வதற்காக அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய சட்டமூலம் மற்றும் அதன் நியாயபூர்வ தன்மை குறித்து ஆராய்வதற்காக மூவர் கொண்ட குழுவை நியமித்துள்ளோம் என தெரிவித்துள்ள அவர் உத்தேச சட்டமூலம் குறித்த எங்கள் அதிருப்தியை சுட்டிக்காட்டி  ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

Exit mobile version