பசில் மற்றும் மஹிந்தவிற்கு எதிரான வெளிநாட்டு தடை நீக்கம்!
![](https://iftamil.com/wp-content/uploads/2023/04/398-jpg-webp-1296x700.webp)
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ச மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த பயணத்தடையை மேலும் நீடிப்பதில்லை என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட நிலையில். மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வுpசாரணையின்போது மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்க்ஷ ஆகியோர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி நவீன் மாரப்பன, இது தொடர்பான தனது வாதங்களை முன்வைத்தார்.
மேலும், குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு இதனை அறிவிக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றத்தை கோரினார்.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், பிரதிவாதிகள் இருவருக்கும் விதிக்கப்பட்ட பயணத்தடை இனி இல்லை என்பதை குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறு உயர் நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டது.