Site icon Tamil News

துப்பாக்கிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் நால்வர் கைது!

உகன, அம்பன்பொல,  கிளிநொச்சி மற்றும் மல்லாவி பொலிஸ் பிரிவுகளில் 5  துப்பாக்கிகளை வைத்திருந்ததாக கூறப்படும்  நால்வரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த நான்கு சந்தேக நபர்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விசாரணைகளின் பின்னர்,  அவர்கள் அந்தந்த பிரதேசங்களின் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

Exit mobile version