Site icon Tamil News

திடீரென பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள் – கிழக்கு இலங்கையில் சம்பவம்

ஏறாவூர் கூட்டுறவு பெற்றோல் நிலையத்தில் எரிபொருள் நிரப்ப வந்த மோட்டார் சைக்கிள் திடீரென எரிந்து நாசமானது.

இந்த சம்பவம் நேற்று (23) பிற்பகல் இடம்பெற்றதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் எரிபொருளை நிரப்பிக்கொண்டு பம்ப் அருகே சில மீட்டர்கள் சென்றபோது மோட்டார் சைக்கிளின் என்ஜின் பகுதியில் இருந்து தீ பரவியது.

தீ விபத்தில் மோட்டார் சைக்கிள் முற்றிலும் எரிந்து நாசமானது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் வெளியே குதித்து உயிரை காப்பாற்றினர்.

எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊழியர்கள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வந்தவர்கள் தீயணைப்பான்களை பயன்படுத்தி தீயை அணைத்துள்ளனர்.

குறித்த சம்பவம் சிசிடிவி கமெராக்கள் மற்றும் கைத்தொலைபேசியில் பதிவான விதம் கீழே…

Exit mobile version